ABOUT ABROAD MBBS STUDY

Share this article on :

நீட் ரிசல்ட் வந்த நிலையில் வெளிநாட்டில் மருத்துவம் படிக்க மொபைல் அழைப்புகள் வரும் ..

 நன்றாகக் யோசித்து முடிவு எடுக்கவும்

 தோழர் அண்ணா Surya Xavier அவர்களின் அனுபவ பதிவு

 // வெளிநாட்டில் மருத்துவம் (MBBS) படித்துவிட்டு இந்தியாவில் மருத்துவராகப் பணியாற்ற விரும்புவோர் செய்ய வேண்டிய பணிகள் விபரம்.

 1. வெளிநாட்டிற்கு படிக்கச் செல்லும் முன்பு இந்திய மருத்துவக் கவுன்சிலில் பதிந்து விட்டு செல்ல வேண்டும். 

2.இந்திய மருத்துவக் கவுன்சில் அதற்கு ஒரு தகுதிச் சான்றிதழ் தரும். அதை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். 

3.ஐந்தரை ஆண்டுகள் படித்துவிட்டு இந்தியா வந்தவுடன் இந்திய மருத்துவக் கவுன்சில் வைக்கும் தேர்வில் வெற்றி பெற வேண்டும்.

இந்த தேர்வு ஆண்டுக்கு இருமுறை ஜீன் மற்றும் டிசம்பரில் நடக்கும்.

 4. வெற்றி பெற்றவுடன் இந்தியாவின் எந்த முனையில் இருந்தாலும் அவர்கள் தரும் தேர்ச்சி சான்றிதழைப் பெற டில்லி செல்ல வேண்டும்.

 5. இந்தியாவில் எந்த மாநிலத்தில் படித்தீர்களோ அந்த மாநிலத்தின் பள்ளி கல்வித்துறையில் உங்கள் 10 மற்றும் 12 ம் வகுப்பு சான்றிதழின் பின்னே ரெட் சீல் வைக்க வேண்டும். இதற்கு அந்த மாநிலத்தின் தலைநகருக்குச் செல்ல வேண்டும்.

 6. அதன் பிறகு 10 மற்றும் 12 ம் வகுப்பு சான்றிதழை இந்திய வெளிவிவகாரத் துறை அமைச்சகத்தில் ஒப்படைக்க வேண்டும். அந்தச் சான்றிதழில் அவர்களிடம் உறுதிப்படுத்தும் முத்திரையிட வேண்டும்.

 7.இப்போது அனைத்து சான்றிதழையும் இணைத்து அந்தந்த மாநிலங்களின் மருத்துவக் கவுன்சிலில் பதிய வேண்டும்.

 8.அதற்கு முன்பு அனைத்துச் சான்றிதழையும் (50 பக்கம் இருக்கும்) ஆறு நகல் எடுத்து அட்டஸ்ட் பெற வேண்டும். அதில் ஒரு நகலை மருத்துவக் கவுன்சிலில் பதிய வேண்டும்.

பதிவு செய்ததற்கான சான்றிதழை அவர்கள் தருவார்கள்.

 9.மாநில மருத்துவக் கவுன்சில் கொடுத்த சான்றிதழை அந்தந்த மாநிலத்தின் மருத்துவக் கல்வித்துறை இயக்குநர் அலுவலகத்தில் அட்டஸ்ட் பெற்ற சான்றிதழுடன் இணைத்துக் கொடுக்க வேண்டும். அப்போது எந்த மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக ஓராண்டு பணியாற்ற விருப்பமுள்ளது என தெரிவிக்க வேண்டும்.

 10. மருத்துவக் கல்வித்துறை இயக்குநர் அலுவலகம் நாம் கேட்ட மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு ஆட்சேபனை இல்லாத சான்று (NOC)கொடுக்க கேட்டு ஒரு கடிதம் தரும்.

 11.அந்தக் கடிதத்தை எடுத்துக் கொண்டு நாம் கேட்ட மருத்துவக் கல்லூரி முதல்வரைச் சந்தித்து அட்டஸ்ட் பெற்ற சான்றிதழுடன் இணைத்து கொடுத்து கேட்க வேண்டும். அவர்களிடம் NOC யைப் பெற வேண்டும்.

 12. நாம் கேட்ட மருத்துவமனையின் தலைமைக் கண்காணிப்பாளரிடம் மருத்துவக் கல்வித்துறை இயக்குநர் அலுவலகம் கொடுத்த கடிதத்துடன் சான்றிதழ் அட்டஸ்ட் காப்பி இணைத்து NOC கேட்க வேண்டும். அவர்கள் NOC தருவார்கள்.

 13. மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை கொடுத்த இரண்டு NOC களையும் எடுத்துக் கொண்டு, அந்த மருத்துவக்கல்லூரி செயல்படும் மருத்துவப் பலகலைக்கழகத்தில் அட்டஸ்ட் சான்றிதழ்களுடன் இணைத்துக் கொடுக்க வேண்டும்.அவர்கள் ஒரு NOC தருவார்கள்.

 14.மருத்துவப் பல்கலைக் கழகம் கொடுத்த NOC யை எடுத்துக் கொண்டு மீண்டும் மருத்துவக் கல்வித்துறை இயக்குநர் அலுவலகம் சென்று ஒப்படைக்க வேண்டும்.

அவர்கள் மருத்துவமனைக்கும், மருத்துவக் கல்லூரிக்கும் பயிற்சி மருத்துவராகப் பணியாற்ற இறுதி உத்தரவு தருவார்கள்.

 15. அவர்கள் கொடுத்த இறுதி உத்தரவை எடுத்துக் கொண்டு மருத்துவமனைக்கு சென்று கொடுக்க வேண்டும். அவர்கள் அங்கு பணியாற்ற இறுதி உத்தரவு தருவார்கள்.

 16. அதை எடுத்துக் கொண்டு மருத்துவக்கல்லூரி முதல்வரிடம் கொடுக்க வேண்டும். அவர் ஒரு இறுதி உத்தரவு தருவார்.

 வெளிநாட்டிலிருந்து வந்தது முதல் இதையெல்லாம் செய்து முடிக்க ஆகும் செலவு ரூ.10 லட்சம் ஆகும்.(லஞ்சம் தனி).

(வெளிநாட்டில் ஐந்தாண்டுகள் படிக்க ஆகும் செலவு.ரூ.50 லட்சம்.)